சண்டாளிகா — 1


மூலம்: ரவீந்திரநாத் தாகூர் — தமிழ் மொழிபெயர்ப்பு: மீனாட்சி பாலகணேஷ்
http://wp.me/p4Uvka-Kv
பிரகிருதி: நான் சொன்னேன்: “நான் ஒரு சண்டாளினி; இந்தக் கிணற்றுநீர் அசுத்தமானது.” அதற்கு அவர், “என்னைப்போல நீயும் ஒரு மனிதப்பிறவிதான். சூட்டைத் தணிவித்து, தாகத்தினை அடக்கும் எல்லாநீரும் புனிதமானதே,” என்றார். எனது வாழ்க்கையிலேயே முதல்முறையாக நான் அப்படிப்பட்ட சொற்களைக்கேட்டேன்.
தாய்: ஆண்களின் சொற்கள் கேட்டுக்கொள்வதற்கு மட்டுமே, கடைப்பிடிக்கப்படுவதற்கு அல்ல என்று அறிந்துகொள். கெட்டவிதி உன்னை இந்த மண்ணாலான சுவரின்மீது அழுத்தியுள்ளது; உலகத்தில் எந்த மண்வெட்டியினாலும் அதனைப்பெயர்த்தெடுக்க இயலாது! நீ அசுத்தமானவள்: வெளியுலகை உனது அசுத்தமான தோற்றத்தினால் கறைப்படுத்தாதே!

நினைவுகளுடன் ஒருத்தி – 3


சீதாலட்சுமி
சமூகசேவகி
கடவுளின் தவிப்பு. மனிதன் அவரை அமைதியாக இருக்கவிடவில்லை. எப்பொழுதும் துரத்திக்கொண்டே இருக்கின்றான். யாரும் அன்புடன், அவரை அவருக்காக அணுகவில்லை. எங்குதான் ஓடி ஒளியமுடியும்?! மனிதன் எட்டிப்பார்க்காத ஓர் இடத்தில் ஒதுங்க நினைக்கின்றார்.

பாடிப்பறந்த குயில் — 6


வையவன்
http://wp.me/p4Uvka-Ky
நிதானமான நடையோடு அவன் பஸ் ஸ்டாண்டை அடையும்போது அவள் அவனைக் கடந்தாள். சிவந்த மேனியும், கம்பீரமான சாந்தமும் முகத்தில் நிலவ, அடர்ந்திருந்த கூந்தலைச் சுயேச்சையாய் அவிழ்த்துவிட்டு, ஆடிய இளங்காற்றில் அதை ஆற்றிக்கொண்டிருப்பது, பகீரதன் தவத்திற்காக மஹாகங்கை வானின்று இறங்கி வந்த ரவிவர்மாவின் படம்போல் அவனுக்குத் தோன்றிற்று. நினைவில் கல்வெட்டுபோல அந்த முகமும் நடையும் பதிவாகிவிட்டன.

விருந்து


ஹரி கிருஷ்ணன்
விருந்தோம்பல் என்பது உறவினருக்கு உணவளித்தல் இல்லை. அறிமுகமில்லாத ஒருவருக்கு உணவளித்தல். விருந்தாளி என்றால் புதியவன்; அறிமுகமில்லாதவன் என்பது பொருள்.
“என்னப்பா சுக்ரீவா! உன் மனைவியைக் காணோமே. என்னைப் போலவே நீயும் உன் மனைவியைப் பிரிந்திருக்கிறாயா?” என்று கேட்கிறான். ருமையைச் சுக்ரீவன் பிரிந்திருப்பதும், வாலியின் ஆளுகைக்கு அவள் உட்பட்டிருப்பதும் தெரியவருகிறது. தன்னைப் போன்றதொரு நிலையிலே சுக்ரீவன் இருப்பதை அறிகிறான். இந்த உணர்வு ஒற்றுமையே வாலியைக் கொல்வதற்கு உடனடி முடிவை இராமன் எடுக்கக் காரணமாகிறது.

நினைவுகளுடன் ஒருத்தி — 1


சீதாலட்சுமி
சமூகசேவகி
http://wp.me/p4Uvka-I1
முதுமை இவ்வளவு கொடியதா? வாழ்வியலில் பன்முகம் தெரிந்தவள். அவளே திணறினாள். சுருண்டாள் அழுதாள் ஒடுங்கிப் போயிருந்த அவளை மனக்குரல் தட்டி எழுப்பியது. அனுபவங்களின் சக்தி அவள் மனச்சிமிழைத் திறந்தது.. சிறிது சிறிதாக அவளிடம் ஓர் புத்துணர்வு. அவள் துவண்டு போக மாட்டாள். மரணத்தையும் வரவேற்கும் வலிமை பிறந்துவிட்டது முதுமையில் துணையிருப்பது நினைவுகள்

பாடிப்பறந்த குயில் – 5


வையவன்
http://wp.me/p4Uvka-Hc
ஜீவானந்தம் பதறிப்போய் அவனைத் திரும்பிப்பார்த்தான். சாதாரண வார்த்தையொன்று சொல்லியவன்போல் தியாகராஜன் அமைதியாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தான். எது வாயில் வரக்கூடாதோ அதுவே தியாகராஜன் வாயிலிருந்து வந்தது. அவன் அபிப்பிராயம் என்ன என்பது மூடுமந்திரமாக, பெரிய புயலுக்கோ மழைக்கோ சூலுற்றிருக்கும் வானம் போல் எச்சரித்தபடியேயும் இருந்தது. அதற்கப்புறம் ஜீவானந்தம் பேசவேயில்லை. எழுந்து கைகழுவச் சென்றபோது மட்டும் தற்செயலாகக் கங்காவின் கண்கள் அவனைச் சந்தித்தன. மேனியெல்லாம் காயம்பட்டுத் தீனமாகப் பார்க்கும் பேடைப் புறாவைப்போல் அந்த சமயத்தில் கங்கா புறப்பட்டாள். சரேலென்று ஜீவானந்தம் அவளைக் கடந்துவிட்டான்.

ஒரு ஜமக்காளத்தின் கதை!


மீனாட்சி பாலகணேஷ்
http://wp.me/p4Uvka-Gp
பழையதாகிவிட்டாலும், பளபளப்பும் அழகும் இம்மியும் குறையாத அந்த பவானிஜமக்காளத்தை பக்திசிரத்தையாக விரித்தாள். எல்லாரும் அமர அதில் இடமிருந்தது. ஜமக்காளத்தின் விளிம்பைத்தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டு என்றும்போல இன்றும் நெஞ்சம்தழுதழுக்க, அப்பா சுந்தரம் தன்தலையில் கைவைத்து ஆசிர்வதிப்பதுபோல உணர்ந்தபடி, உடலெல்லாம் சிலிர்க்க, நான்குமூலைகளிலும் பச்சைக்கிளிகள் கொஞ்சும் அந்த தங்கநிறப் பட்டுஜமக்காளத்தில் அமர்ந்தாள் உஷா.

பாடிப்பறந்த குயில் — 4


வையவன் http://wp.me/p4Uvka-F1  தியாகராஜன் கலகலவென்று சிரித்தான். “இந்தப் பெண்ணுக்கு மரியாதை தெரியல்லே. ஆனால் அழகாகக் கோவிச்சுக்கிறாள், இல்லையா மிஸ்டர் ஜீவன்?” என்றான். இந்த வெட்கமற்ற பேச்சும், அவனைக் … மேலும்

பாடிப் பறந்த குயில் – 3


வையவன்
http://wp.me/p4Uvka-Eo ஜீவானந்தம் அவரைப் பற்றிய யோசனைகளிலிருந்து மெல்ல விடுபட்டபோது, வெகு அருகில் குதிரையின் குளம்படியோசை கேட்டது. வேகமாக அவன் திரும்பிப் பார்ப்பதற்குள் ஒரு துப்பாக்கியின் கடடைப் பகுதி அவன் தோள் மேல் பட்டு அவனைப் புதர் ஓரத்துக்கு உந்தித் தள்ளியது. அவன் ஆத்திரத்தோடு நிமரிந்து பார்த்தான். சாக்லெட் வர்ணத்தில் வேட்டைக்காரர்கள் அணிவது போன்ற ஒரு கோட்டும் தொப்பியும் அணிந்து கொண்டு, கடுகடுப்பான பார்வையும், ஏளனமான புன்னகையுமாய் ஒரு சிவந்த மனிதன் குதிரையை இழுத்துப் பிடித்தான். அவனுடைய இடது கையில் இருந்த வேட்டைத் துப்பாக்கி வெய்யிலில் பளபளவென்று மின்னியது.

தேவிக்குகந்த நவராத்திரி — 5


மீனாட்சி பாலகணேஷ்
http://wp.me/p4Uvka-DM
9. தேவியின் தாம்பூல மகிமை!
அப்போது அவளைக் காண தேவசேனாபதியான சுப்பிரமணியன், தேவர்களின் தலைவனான இந்திரன், உபேந்திரனாகிய விஷ்ணு முதலானோர் வருகைபுரிகின்றனர். தேவாசுர யுத்தத்தில் அசுரர்களை வென்று வெற்றிபெற்றதை அன்னையிடம் கூற ஒடோடி வந்துள்ளான், அருமைமைந்தன்.
நேராக யுத்தகளத்திலிருந்து வருவதால், கவசம் தலைப்பாகை முதலியன தரித்திருந்தவன், தலைப்பாகையை மரியாதையின் நிமித்தம் கழற்றிவிட்டு அன்னையிடம் வந்து வணங்குகிறான்.

பாடிப்பறந்த குயில் – 2


வையவன்
நீங்க உணர்ந்துட்டா சரிதான். என்ன கேட்டீங்க? இந்த வெய்யில்லே ஏன் கஷ்டப்படறேன்னுதானே! நீங்க பாருங்க, உழைப்பிலேதான் மனிதனோட பெருமையெல்லாம் இருக்கு. நீங்க பாருங்க சின்னப் பிள்ளை. இப்படிக் கேட்கலாமா? லட்சக்கணக்கான வருஷங்களுக்கு முன்னே இந்த உலகம் வெறும் மண்ணும் கல்லுமாயிருந்தது. மனிதனின் வேர்வைதானே இன்னைக்கு நாம் பார்க்கிற மெஷின், வீடு, நாகரிகம் எல்லாம். மனிதன் வயசை நெனச்சி வெய்யிலைப் பார்த்து உழைப்புக்கு அஞ்சியிருந்தா இதெல்லாம் நீங்க பார்க்க முடியுமா?

பாடிப் பறந்த குயில் — 1


வையவன்
http://wp.me/p4Uvka-Bu ஜீவானந்தம் அருவியில் யாரோ கடகடவென்று வாயைக் கொப்பளித்து உமிழும் சத்தம் கேட்டு, யோசனையிலிருந்து விடுபட்டு நிமிர்ந்து பார்த்தான்.

நிஷா குளித்துக் கொண்டிருந்தாள்.

கன்னங்கரிய கூந்தல் தலைக்கு மேலே கட்டியிருக்க அவளுடைய பொன்னிறமான முதுகு ஜலத்தில் பட்டு, பரப்புக்கு மேலே தெரிந்தது. ஜீவானந்தம் வந்ததை அவள் பார்க்கவில்லை. எனவே சுயேச்சையாக நீந்திக் கொண்டிருந்தாள். சதைப் பற்றான தோள்களும் கடைசல் பிடித்தாற் போன்ற அமைப்பான கரங்களை அவள் வீசி வீசிப்போடும்போது, அவை அசைந்த அழகும் ரம்மியமாக இருந்தன.