சாணக்கிய நீதி – 6


தம் குழந்தைகள் நல்லபடியாக வளரவேண்டும் என விரும்புபவர் தமது குழந்தகள் தான்தோன்றித்தனமாகச் செல்லவிடக்கூடாது.  அவர்கள் பிடிவாதம் பிடித்தாலும், அவர்கள் போக்கில் செல்லவிடாது நல்வழிப்படுத்தி நடத்திட வேண்டும். மிகவும் மதிப்புள்ள எவையும் — கற்களானலும், முத்தானாலும், ஆன்றோரானாலும், மணமுள்ள மரமானாலும் சரி – அவை எல்லா இடங்களிலும் இருப்பதில்லை.  ஆகவே, எதையும் ஒரு கட்டத்திற்குள் அடைக்கக்கூடாது – ஸ்டீரியோ டைப் செய்யக்கூடாது

சேக்கிழாரின் செழுந்தமிழ்


ஆனாயர் வரலாற்றைக் கூறவந்த சேக்கிழார் அப்பகுதியில் கார்காலத்தைப் பற்றி பெண்ணாக உருவகம் செய்கிறார். திருக்குறிப்புத் தொண்டர் வரலாற்றில் நிலவளம் கூறும் இடத்தில் நெய்தல் நிலத்தில் ஓர் காட்சியைக் கூறுகிறார்

சாணக்கிய நீதி – 5


பீஷ்மப் பிதாமகர் உள்ளவரை தான் களமிறங்க மாட்டேன் என்று தனது பெருமைக்காகக் கர்ணன், தன் நண்பன் துரியனின் வெற்றிக்கு அடிகோல மறுத்துவிட்டான்.
ஆனால், ‘என் மைந்தன் அபிமன்யுவின் இறப்புக்குக் காரணமான ஜயத்ரதனை இன்று கதிரவன் சாய்வதற்குள் கொல்லாவிடில் என் உயிரைத் தியாகம் செய்வேன்,’ என்று சூளுரைத்த தன் நண்பன் அர்ஜுனனின் உயிரைக் காக்கக் கதிரவனையே சிறிது நேரம் தன் சக்கரப் படையால் மறையச் செய்தான், அந்த மாயக் கண்ணன். இதை எவரும் எடுத்துச் சொல்வதில்லை.  அதனால், கர்ணனே புகழப் படுகிறான். 

கம்பன் காட்டும் இலக்கியச்சுவை


இராமனைக்கண்டு மகளிர் மையல்கொண்ட ஒருத்தி தன் தோழியிடம், “என் நெஞ்சில் வஞ்சனாகிய இராமன் வந்து புகுந்துள்ளான். அவன் என் கண் வழியாக வெளியே போய்விடுவான்; எனவே அவன் வெளியேற இயலாதபடி என் கண்ணைச் சிக்கென மூடிக்கொள்வேன், இனி அவனுடன் படுக்கைக்குப் போய்ச் சேர்வோம்,” என்று கூறுவாள்.

இலக்கிய அமிழ்து-1


  கம்பனுக்கு மலையைக் கண்டவுடன் சிவபிரானின் திருவடியே நினைவுக்கு வருகிறது. அதனை இரு இடத்துக் கூறுவான். இராமன் சீதைக்கு சித்திரகூடத்துச் சிறப்பினைக் கூறுகிறான்; பலவிதமான இயற்கைக் காட்சிகளையும் வருணித்து விவரிக்கிறான். ‘மலைமுகட்டில் திங்களும் அதனால் ஒளிரும் மணிகள் சடையாகவும் மலையிலிருந்து விழும் வெண்ணிற அருவியானது இளமையான இடபத்தில் (நந்திதேவர் மீது) ஏறிவரும் சிவபிரானின் முடியில் உள்ள கங்கையை ஒத்திருப்பதனைக் காணாய்!’ என்பதாக இராமன் கூறுவதாகக் கம்பன் கூறுவான்.

சாணக்கிய நீதி – 4


அறிவில் பெண்கள் ஆண்களைவிட நான்கு மடங்கு சிறந்தவர் என்று சொல்கிறார்கல் என்று புகழ்கிறார்; இதிலிருந்து அவர் பெண்களுக்கு எதிரானவர் என்று சொல்வதை விட்டுவிடவேண்டும்.  பிறப்பிலிருந்து பெண் பலவிதமனா பொறுப்புகளைச் சுமக்கிறாள்.  வீட்டுவேலை, தையல், சமையல், வீட்டு நிர்வாகம், குழந்தை வளர்ப்பு, கணவனைப் போற்றுதல், தன்னைத் தற்காத்தல் போன்ற எத்தனை எத்தனை பொறுப்புகள்!  இதைச் செவ்வனே செய்ய மதிநுட்பம் தேவையல்லவா? 

இலக்கிய இன்பம்


எப்போது நட்பு உறுதிப்படுத்தப்பட்டுவிட்டதோ, குகன் அதனைப் பற்றிக்கொண்டான். ராமனுக்காக எதையும் இழக்கத் தயாராக நின்ற நட்பு அவனுடையது.  நட்பு எனும் சொல் அவனுடைய உள்ளத்தில் ஆணிபோலப் பதிந்து மாயம்செய்துவிட்டது. ராமனிடமிருந்து அவன் எதையும் வேண்டவில்லை; எதிர்பார்க்கவுமில்லை. அவனுடைய நட்பு எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டது.

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!


உலகத் தமிழ் விண்மீன்களுக்குத் தாரகையின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

 கம்பன் காட்டும் இலக்கியச்சுவை


‘தீவினை உடைய அரக்கர்களாகிய கரி வெந்து அழிய, சானகி எனும் நெருப்பு அவர் நடுவில் தங்கி இருப்பதால் இராமன் செலுத்திய அம்பு எனும் பெருங்காற்றால் அந்த நெருப்புகனன்று, பொன்போலும் இலங்கை நகர் உருகிடும்

சாணக்கிய நீதி-3


ஆற்றை மனிதர் அளவுக்கு உயர்த்தி ஐவராகக் கணக்கிடுகிறார், சாணக்கியர்.
மக்கள் நோய்நொடியின்றி வாழவேண்டும். அதற்கு
மருத்துவரின் சேவை இன்றியமையாதது.  இரண்டாண்டுகளாக கோவிட் மக்களை வருத்தெடுத்துக் கொல்லும்போது, மக்களுக்கு உதவிசெய்து, பிணிநீக்கியவர் மருத்துவர்தாமே!  அவர்களின் உழைப்பும், பரிவும், தன்னலமற்ற சேவையும் இல்லாதுபோனால் எத்தனை கோடி மக்கள் மரித்திருப்பர்?

சாணக்கிய நீதி – 2


செல்வத்தையே அதற்கு நாயகியான இலக்குமி என்று குறிப்பிட்ட சாணக்கியர். எப்படிச் சேர்த்துவைத்தாலும், நிலையாமல் சென்றுகொண்டிருக்கும் செல்வமான இலக்குமி சென்றுவிடுவாள் என்று  செல்வம் நிலையானதல்ல என்றும் எச்சரிக்கை செய்கிறார்,  செல்வோம் என்பதே செல்வம்.