தேவிக்குகந்த நவராத்திரி — 5


மீனாட்சி பாலகணேஷ்
http://wp.me/p4Uvka-DM
9. தேவியின் தாம்பூல மகிமை!
அப்போது அவளைக் காண தேவசேனாபதியான சுப்பிரமணியன், தேவர்களின் தலைவனான இந்திரன், உபேந்திரனாகிய விஷ்ணு முதலானோர் வருகைபுரிகின்றனர். தேவாசுர யுத்தத்தில் அசுரர்களை வென்று வெற்றிபெற்றதை அன்னையிடம் கூற ஒடோடி வந்துள்ளான், அருமைமைந்தன்.
நேராக யுத்தகளத்திலிருந்து வருவதால், கவசம் தலைப்பாகை முதலியன தரித்திருந்தவன், தலைப்பாகையை மரியாதையின் நிமித்தம் கழற்றிவிட்டு அன்னையிடம் வந்து வணங்குகிறான்.