கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் 99 பூக்கள் – 24


முனைவர் இரா.இராமகிருட்டிணன்
நறுமணமுள்ள பூக்களைத் தரும், பசுமையான அழகிய பெரிய கொடியான குருகு தற்காலத்தில் குருக்கத்தி என்றும்,. மாதவி என்ற வடமொழிப் பெயராலும் வழங்கும்.
பீர்க்கம் பூ என நச்சினார்க்கினியரால் குறிப்பிடப்படும் இப்பூ பீரை, பீரம், பீர், பீர்க்கு என்றெல்லாம் வழங்கப்படும். பாழிடங்களிலும், வேலியோரங்களிலும் படர்ந்து வளர்கின்ற பொன்போன்ற நிறத்தை உடைய இம்மலர் வாடைக் காலத்திலும் மலரும்.