பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி


ருத்ரா
தலைவன் பொருள்தேடி செல்லும் காட்டுவழியில் குத்துக் குத்தாய் முளைத்திருக்கும் கரும்புகள் அருகில் உள்ள ஒரு நீண்ட திரண்ட பெருங்கல் ஒன்று இடம் பெயர்ந்து அவற்றின் மேல் விழுந்து பொருந்தி நசுக்கியதால் அருகில் உள்ள இலை தழைகளில் எல்லாம் இனிய நீர் இழைந்தோடியது.அதை வண்டுகள் அருந்தி மயங்கின. அருகில் வந்த ஒரு யானை தன் தும்பிக்கையை நீட்டி சுவைக்க முற்பட்டது.அந்த அடர்ந்த இருட்டு சூழ்ந்த காட்டில் அது தன் சிறுகண் கொண்டு வியந்து நோக்கி விதிர் விதிர்த்தது.