வேதாந்தத் தெளிவாம் சைவசித்தாந்தம் – 7


முனைவர் கோ.ந. முத்துக்குமாரசாமி
அதர்மத்தை வெல்ல, கண்ணன் அதர்ம வழியை மேற்கொண்டதைப்போல், பவுத்தர்களின் சூனியவாதம் கணபங்கவாதம் போன்றவற்றை எதிர்கொள்ள, அக்கருத்துக்களை உள்வாங்கி உருவாக்கப்பட்டது, பிரம ஆன்மவாதம்.
நனவு, கனவு, சுழுத்தி இம்மூன்று நிலைகளையும் அனுபவிக்கும் ஆன்மா தன்னைத்தான் அனுபவித்தல் இல்லை என்னும் மாண்டூக்கிய காரிகை உரையில் கூறப்படும் உவமைக்குச் சரியான பொருளை விரித்துச் சிவஞானபோதம் கூறுகிறது.

திருமறைக்காடு – ஊரும் பெயரும் – இலக்கிய ஆய்வு


பொன். சரவணன்
கோவிலைச் சுற்றி இருந்த காட்டுமரங்கள் கடல்நீரைத் தடுத்தது மட்டுமின்றி கடல்அலைகளின் ஆரவாரத்தினை உள்வாங்கிப் பெருக்கி ‘ஓம்’ என்பதைப் போல ஒரு ஒலியினை எப்போதும் ஒலித்துக் கொண்டிருந்தன. இது சில இயற்கைச் சூழ்நிலைகளில் நடக்கக்கூடிய ஒன்றேயாகும். மக்கள் இந்த மரங்களுக்கிடையில் செல்லும்போது ‘ஓம்’ என்பதைப் போல ஒரு ஒலி கேட்டுக்கொண்டிருந்தபடியால், இந்த மரங்கள் வேதம் ஓதுவாகக் கருதி ‘ மறையினை ஓதும் காடு ‘ என்ற பொருளில் அவ் ஊருக்கு ‘மறைக்காடு’ என்ற பெயர் சூட்டினர். அதுவே பின்னாளில் வேதங்களே மரங்களாக மாறிநின்று இறைவனைப் போற்றுகின்றன என்பதாகப் புரிந்துகொள்ளப்பட்டு விட்டது.

அடிமைத் திறனே அன்பாக – 5


அடிமைத்  திறனே அன்பாக – 5 முனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமி சுந்தரன் நட்பு http://wp.me/P4Uvka-ge  பரவையாரின் ஊடல் தம்முடைய வரவை அறிவிக்க, நம்பியாரூரர் தம் பரிசனங்களைப் பரவையார் திருமாளிகைக்கு … மேலும்