கிருஷ்ணன் எனும் சிறு குட்டன்!- 20


மறுபகிர்வு: நன்றி: சொல்வனம் மின்னிதழ்
மீனாட்சி பாலகணேஷ்
கானமழை பொழிகின்றான்…
மனித உயிர்கள் மட்டுமல்லாது மற்ற ஐந்தறிவு உயிர்களும் கிறங்கி நிற்கும் இசையின் இனிமையை நாம் இப்பாசுரத்தில் உணருகிறோம். இசைமயக்கம் மட்டுமின்றி, இசைப்பவன் தானே அவ்விசையாகி இயங்கும்போது ஏற்படும் மெய்ப்பாடுகளை – -‘செங்கண் கோடச் செய்யவாய் கொப்பளிப்ப குறுவெயர்ப்புருவம்கூடலிப்ப’ எனவெல்லாம் நுட்பமாகப் பதிவு செய்திருக்கும் அழகும் இப்பாடலில் மிளிர்கின்றது.
‘இதுதானோ கிருஷ்ணானுபவம்’ என, என்னைப்போல் அதனை உணரவியலாத அறிவிலி தடுமாறுவதும் நியாயம்தானே?