அக்கமாதேவி என்னும் அற்புதம்


தி.இரா.மீனா
திருமணமான குறுகியகாலத்திலேயே அவ்வாழ்விலிருந்து வெளியேறும் அக்கமாதேவி, தன் ஆடையைக் களைந்து நீண்ட கூந்தலால் உடலை மறைத்து, தன் வாழ்வுச் சூழலை மாற்றிக் கொள்கிறாள்.
பிரபு: ஆடையைக் களைந்து கூந்தலால் உடலை மூடிமறைக்கும் உன் செயல் பொருத்தமில்லாததாக இருக்கிறது. உடலைப்பற்றிய உள்ளுணர்வு இருந்தால்தான் இப்படியான வெளிப்பாடு வரும். அதனால் இன்னும் நீ அதிலிருந்து வெளிவரவில்லை. அதை விளக்கிச் சொல்.