கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 9


முனைவர் இரா. இராமகிருட்டினன்
ஆவாரம்பூ உயிர் காக்கும் மருந்தாவதை அறியலாம். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த நம் சித்தர்கள் பல மூலிகைகளைக் கண்டறிந்து கூறியுள்ளனர். அவற்றில் ஆவாரம்பூவும் ஒன்று. ஆவாரம்பூவின் வேதிப்பொருள்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது என்று பல ஆய்வறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.