காவியத்தலைவன் இவன் ஆடவர்களுக்குள் மிகவும் உயர்வானவன்; அவனுக்கு ஈடு இணை யாருமில்லை; சூரிய சந்திரர்கள் தேரிலேறி வலம் வந்து மலர்களைத் தூவிப் பணியும் குற்றாலமலையில் செம்பொன்னாலாகிய கோவிலினுள் உறைபவன். அவனை மலர்களைத் தூவி இவ்வுலகத்து அடியார்கள் போற்றுவார்கள்; அவன் திருநாமம் குற்றாலநாதன்.
இவள் அவனுடைய உயிரானவள், உடலிலும் பாதி கொண்டவள், குழல்வாய் மொழியாள் எனும் காதல் நாயகி அவனிடம் ஊடல் கொண்டு விட்டாள்! காரணம் ஏன் தெரியுமா?