இனி என்னைப் புதிய உயிராக்கி-13



மீனாட்சி பாலகணேஷ்

http://wp.me/P4Uvka-uu 

                     ஷீலா உறக்கம் பிடிக்காமல் தவித்தாள்.   எப்படி உறக்கம் வரும்? பங்களாவின் வேறு அறைகளில் ஜிம், கீதாஞ்சலி எல்லாரும் உறங்கிக் கொண்டிருக்கும்போது, அவளுக்கு எப்படி உறக்கம் வரும்?!

            அவளுக்குத் தெரிந்து சமீபத்தில் இதயபூர்வமான களங்கமற்ற அன்பில் நனைந்து குளிர்ந்தது அன்று மாலை தான்.   வீடு கலகலப்பாக, இனிமை நிறைந்ததாக விளங்கியதும் அன்றுதான்.

***

பின்னூட்டமொன்றை இடுக